districts

img

முதல்வர் பதவியேற்று ஓராண்டு நிறைவு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு குடவாசல் பேருந்து நிலையத்தின் அருகே திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆதித்யா பாலு, மாவட்ட பிரதிநிதி ஏ.கே.டி.சேரன், நகர இலக்கிய அணி அமைப்பாளர் கே.கே.பி.செந்தில், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் எஸ்.எஸ்.சகாபுதீன் கலந்து கொண்டனர்.