தஞ்சாவூர், செப்.19 - முதலமைச்சரின் “உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்” படி, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில்பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், புதன் மற்றும் வியாழக்கிழமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பொதுமக்களை நேரில் சந்தித்து குறை களை கேட்டறிந்தார். அப்போது பள்ளிக் குழந்தைகளிடம் மழலை மொழியில் பேசி கொஞ்சியது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. பேராவூரணி வட்டத்தில் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உட னுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களிடம் சிகிச்சை நல்ல முறையில் அளிக் கப்படுகிறதா என்பதையும், மருந்துகள் இருப்பு, மருத்துவர் பணியாளர் வருகைப் பதிவேடு ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், காலகம் ஊராட்சி மன்ற அலு வலகத்தின் செயல்பாடுகளையும், கொன்றைக்காடுஅரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களின் கல்வித் திறன் பற்றியும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், சமையல் கூடம் நன்கு பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், குழந்தைகள் நேயப் பள்ளி மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேராவூரணி தேர்வு நிலைப் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவின் செயல்பாடுகளையும், இப்பூங்காவில் உரம் தயாரிக்கும் பணிகள், மீன் வளர்ப்புக் குளம், பசுமைகுடில், உரம் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பேராவூரணியில் ரூ.4 கோடியே 90 லட்சம் அரசு மானியத்தில் 21 உறுப்பி னர்களின் பங்களிப்புடன் கூடிய பேரா வூரணி கயிறு உற்பத்தி நிறுவனம் இயந்தி ரங்கள் பொருத்தப்பட்டு 3 மாதத்தில் துவங்கு வதற்காக தயார் நிலையில் இருப்பதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பேராவூரணி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஏராளமான பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் மு.பாலகணேஷ் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்ற இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் தலைமையுரையாற்றி 11 பய னாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சி யர் ஜெயஸ்ரீ, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.செல்வகுமார் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.