புதுக்கோட்டை, மே 9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காரல் மார்க்ஸ் பிறந்த தினத்தை யொட்டி புதுக்கோட்டையில் நீர், மோர், பழங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரம் காமராஜபுரம் கிளை யின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளைச் செயலாளர் காளிதாஸ் ஜீவா தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.சோலை யப்பன் முன்னிலை வகித்தார். நீர், மோர், பழங்கள் வழங்கும் நிகழ்வை கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் என்.பொன்னி, ஏ.ஸ்ரீதர், ஜி.நாகராஜன், நகரக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.ரகுமான், பழ.குமரேசன், எஸ்.பாண்டி யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.