districts

கல்லக்குடி அருகே சாராய ஊறல் கண்டுபிடிப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 5-

    திருச்சி மாவட்டம் கல்லக்குடி தபை பகுதியில் உள்ள  ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சுவதாக திருவெறும்பூர் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் சோதனை யிட்டபோது தபை ஏரிக்கரையில் சாராய ஊறல் இருப்பது கண்டறியப்பட்டது.  

    இதில், 4 லிட்டர் வடிகட்டிய சாராயமும், 200 லிட்டர்  சாராய ஊறலும் அங்கு இருந்தது. இதனை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில்,  சாராய ஊறலை லால்குடி கள்ளக்குடி ராஜா டாக்கீஸ்  எதிர்ப்புறம் உள்ள சிதம்பரம் சாலையில் வசிக்கும் தனபால்  என்பவர் போட்டு வைத்திருந்ததாக தெரிய வந்தது. இவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.