தொழிற்பயிற்சி (ஐடிஐ) பாட திட்டத்திலிருந்து கணிதம், பொறியியல் வரைபட பாடங்களை நீக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கசாலை ஐடிஐ வளாகம் முன்பு வெள்ளியன்று (அக்.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி, இணைச் செயலாளர் வி.விஜயகுமரன், துணைத் தலைவர் விவேகானந்தன், அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் எம்.பஞ்சம் கே.மோகன்தாஸ், எஸ்.சொலைராஜ், பி.கனகராஜ் ஆகியோர் பேசினர்.