மயிலாடுதுறை, மார்ச் 21- விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் காபிரியேல் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டா லின், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் ஆகி யோர் விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சட்டக்கூலியை கேரள அர சுப்போன்று ரூ.600-ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தி அறிவிக்க வேண் டும், விவசாயத் தொழிலாளர் களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தப் பட்டன. இதைத்தொடர்ந்து கோரிக்கை கள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.