districts

img

மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணத்துக்கு நீதி கேட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.20- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே கருப்பூர் கிராமத்தில், காவல்துறை யால் அடித்து கொலை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி பிரபாகரன் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில், தஞ்சா வூர் ரயிலடியில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் டி.கணேசன் உரையாற்றி னார். மாவட்ட துணைத்தலைவர்கள் பி. சங்கிலிமுத்து, ரவி, மாவட்ட துணைச் செய லாளர் சி.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் பிரபாகரன், தஞ்சை நகரத் தலைவர் மோகன் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், ‘‘மறைந்த பிரபாகரன்  குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதில், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’’ என முழக்கங் கள் எழுப்பப்பட்டன.