districts

img

பட்டா மாற்ற முறைகேடை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அக். 7: இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்  திருப்பூரில் இடதுசாரி கட்சிகள் முடிவு

திருப்பூர், அக்.2 – காட்டுமிராண்டித்தனமாக போரை ஏவி விட்டு அப்பாவி  மக்களை படுகொலை செய்து வரும் இஸ்ரேலை கண்டித்து  திருப்பூரில் அக்டோபர் 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது  என இடதுசாரி கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.  திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய் அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் எம்.சி., தலைமையில் இடதுசாரி கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, எஸ்.சுப்பிர மணியம், டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் பி.ஆர். கணேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர்  புறநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.இசாக் ஆகியோர் பங் கேற்றனர்.  இந்தக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தின் மீது இன அழிப்பு  போரை நடத்தி நாற்பதுதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த இஸ்ரேல், ஐக்கிய  நாடுகள் சபை மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்காமல்,  உலக நாடுகளின் மக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தற்போது போரை விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக லெப னான், ஏமன் உள்ளிட்ட நாடுகளின் மீதும் கொடூரமான தாக்கு தலை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்து வரு கிறது. ஆதிக்க வெறிபிடித்த இஸ்ரேலை கண்டித்து அக்டோ பர் 7ஆம் தேதி நாடு தழுவிய கண்டன இயக்கம் நடத்துவது என்று இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.  அதன்படி மாவட்ட தலைநகரம் என்ற முறையில் திருப்பூ ரில் அக்டோபர் 7ஆம் தேதி திங்கட்கிழமை, தியாகி குமரன்  நினைவகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து இஸ்ரேலை கண் டித்து இயக்கம் நடத்துவது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு  எடுக்கப்பட்டது. இவ்வியக்கத்தில் கட்சி அணியினர் பெருந்தி ராளாக பங்கேற்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள் ளனர்.

மளிகைப்பொருள் விற்க கட்டாயப்படுத்துவதா?  

திருப்பூர், அக். 2 -  நியாய விலை கடைகளுக்கு டீ தூள் மற்றும் மளிகைப் பொருட்களை கட்டாயப்படுத்தி இறக்கி மக்களிடம் விற்க  சொல்லுவதற்கு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங் கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் மற் றும் துணை பதிவாளர் (பொது விநியோகம் திட்டம்) மற்றும்  கூட்டுறவு சார் பதிவாளர் உள்ளிட்டோருக்கு சிஐடியு கூட்டுறவு  பணியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பி.கௌத மன் கடிதம் எழுதியுள்ளார். இதில், நியாய விலைக் கடைக ளுக்கு வழங்கக் கூடிய பொருட்கள் குறைந்த நாளில்  காலாவதி தேதி உள்ள டீத்தூள் மற்றும் மளிகைப் பொருட் களை கட்டாயப்படுத்தி இறக்குகின்றனர்.  கடையில் விற் பனையாளர்கள் மளிகை தேவை பட்டியல் வழங்கப்பட் டால் மட்டும், அந்தப் பொருட்களை வழங்க வேண்டும்.  தவறும் பட்சத்தில் கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் சார்பில் போராட்ட நடவடிக்கைகளில் இறங்க நேரிடும் என தெரிவித் துள்ளார்.

இன்று ‘தருமபுரி வாசிக்கிறது’ நிகழ்ச்சி

தருமபுரி, அக்.2- புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, ‘தருமபுரி வாசிக்கிறது’ நிகழ்ச்சி வியாழ னன்று (இன்று) நடைபெற உள்ளது. தருமபுரியில் 6 ஆம் ஆண்டு புத்தகத்  திருவிழா வெள்ளியன்று (நாளை) துவங்குகிறது. இதையொட்டி தருமபுரி  அரசு கலைக்கல்லூரியில் வியாழ னன்று (இன்று) ‘தருமபுரி வாசிக்கிறது’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாவட்ட  ஆட்சியர் கி.சாந்தி துவக்கி வைத்து உரையாற்றுகிறார். மாவட்டம் முழுவ தும் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வாசிப்பு இயக்கத்தில் பங் கேற்க உள்ளனர். மேலும், பொது மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆங்காங்கே வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். வீடுகள், நூல கங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வாசிப்பில் ஈடுபட லாம். மாவட்டத்தின் அறிவு இயக்கமாக ‘தருமபுரி வாசிக்கிறது’ நிகழ்ச்சியை முனைப்புடன் முன்னெடுக்க அனைத்து  தரப்பினரும் முன்வர வேண்டும் என  தகடூர் புத்தகப் பேரவை செயலா ளர் இரா.செந்தில் கேட்டுக்கொண்டுள் ளார்.

சிறுத்தையை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது

சேலம், அக்.2- மேட்டூர் அருகே சிறுத்தையை சுட்டுக்கொன்ற வழக்கில்,  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உட்பட 3 பேரை வனத் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஒன் றியத்திற்குட்பட்ட புதுவேலமங்கலம், கருங்காடு, வெள்ளக் கரட்டூர், குழிக்காடு, கருங்கரடு ஆகிய கிராம விவசாயிகள்  கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில்  கடந்த செப்.8 ஆம் தேதியன்று ஊருக்குள் புகுந்த சிறுத்தை,  விவசாயிகள் வளா்த்து வந்த 30க்கும் மேற்பட்ட ஆடு, 20க்கும்  மேற்பட்ட கோழிகளை வேட்டையாடியது. இதனால் அச்ச மடைந்த கிராம மக்கள் சிறுத்தையைப் பிடிக்க வலியுறுத்தி  பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனிடையே,  கடந்த செப்.24 ஆம் தேதியன்று கருங்கரடு பகுதியில் உடலில்  காயங்களுடன் சிறுத்தை உயிரிழந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினர், உடற்கூறாய்வு செய்தபின் எரியூட்டினர். தொடர்ந்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டதில், தின்னம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முனுசாமியும், அவரது  நண்பர்களான சசி, ராஜா ஆகிய மூன்று பேரும் சிறுத்தையை  நாட்டுத்துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இதனை யடுத்து, தலைமறைவாக இருந்த 3 பேரையும் வனத்துறை அதிகாரிகள் திங்களன்று ஈரோடு மாவட்டத்தில் வைத்து கைது  செய்து, விசாரணை நடத்தினர். இதன்பின் 3 பேரையும் செவ் வாயன்று மாலை மேட்டூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, 15  நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

குட்டியானை உயிரிழப்பு

தருமபுரி, அக்.2- ஒகேனக்கல் வனப்பகுதியில் தடுமாறி பள்ளத்தில் விழுந்த  ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குட்டி யானை உயிரிழந் தது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனச்சரகத்திற்குட் பட்ட ஊட்டமலை பீட் படிக்கட்டு தடம் பகுதியில் குட்டியானை  ஒன்று இறந்து கிடப்பதாக ஒகேனக்கல் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பெயரில் நிகழ்விடத்திற்குச் சென்ற ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் தலை மையிலான வனக்குழுவினா், குட்டி யானை இறப்பு குறித்து  உறுதி செய்தனர். இதையடுத்து தருமபுரி மாவட்ட வன  அலுவலர் ராஜாங்கம், உதவி வனப்பாதுகாவலர் வின்சென்ட்  ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்தனர். உயிரிழந்து கிடந் தது ஒரு வயது மதிக்கத்தக்க பெண் யானை குட்டி என்ப தும், கூட்டத்தோடு சென்று கொண்டிருக்கும் போது நிலை தடு மாறி பள்ளத்தில் விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரி ழந்ததாகவும் வனத்துறையினா் தெரிவித்தனர். இதை யடுத்து பென்னாகரம் கால்நடை மருத்துவர் உதவியுடன் குட்டியானையை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு

ஈரோடு, அக்.2- சிபிஎம் கிளை மாநாடுகள் நடைபெற்று, கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடைபெற்று, செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, பவானி தாலுகா, வாய்க்கால்பா ளையம் கிளைச் செயலாளராக எம்.தங்கராசு, வேலாமரத்தூர் கிளைச் செயலாளராக எம்.முனியப்பன், ஆப்பக்கூடல் கிளைச் செயலாளராக எம்.காளீஸ்வரன், பவானி ஏ.கிளைச் செயலாளராக பி.கே.பாலசுந்தரம், பி.கிளைச் செயலா ளராக எம்.பெரியசாமி, வளையக்காரன்பாளையம் ஏ.கிளைச் செயலாளராக பி.வினோத்குமார், பி.கிளைச் செயலாள ராக பாலமுருகன், கவுந்தப்பாடி கிளைச் செயலாளராக சண்முகம், பெரியமோளபாளையம் கிளைச் செயலாள ராக வி.தமிழ்செல்வன், சுக்காநாயக்கனூர் கிளைச் செயலாள ராக ஏ.பொம்முராஜ், கேசரிமங்கலம் கிளைச் செயலாளராக எம்.சாந்தி, ஒரிச்சேரிபுதூர் கிளைச் செயலாளராக பி.பெரிய சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

விசாரணை கைதிகளை சந்திக்க கூடுதல் நேரம்

கோவை, அக்.2- கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு உள்ளது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள விசா ரணை கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட நேரம், தற்போது, மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக் கப்பட்டு உள்ளது. இந்த புதிய ஏற்பாடு அக்.1 முதல் அமலுக்கு  வந்து உள்ளது. இதன் மூலம் வழக்கறிஞர்களுக்கு கூடுதலாக 3 மணி நேரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம்  வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை எற்று அதிக  நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வழக்கமாக, வழக்கறி ஞர்கள் சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கைதிகளை  சந்திக்க முடியும். தற்போது, வழக்கறிஞர்கள் முன்பதிவு  செய்து கைதிகளை சந்திப்பது தொடர்பாக ஆலோசனை கள் நடைபெற்று வருகின்றன.

பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

தருமபுரி, அக்.2- பழுதடைந்த சாலையை சீரமைத்துத்தர வேண்டும் என வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், கோபிசெட்டி பட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணலாம்பட்டி கிராமத்தில் ஏழை மக்கள் அதிகளவில் வசித்து வரு கின்றனர். வீடு இல்லாமல் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனர். எனவே, இம்மக்க ளுக்கு அரசு வீடு கட்டித்தர வேண்டும். மேலும், பெத்தூரில் இருந்து ஊத்தப்பள்ளம் வரை உள்ள சாலை குண்டும், குழியு மாக உள்ளது. இதனால் வாகனம் மற்றும் நடந்து செல் வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, 3 கிலோ மீட்டர் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தி, கோபிசெட்டிபட்டி பாளை யத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர். இந்நிகழ்வில், வாலிபர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ம.குறளரசன், நிர்வாகி குமரேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.