மார்ச்.5-இல் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், பிப்.25 - தஞ்சாவூரில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநகரத் தலை வர் ஹெச்.அப்துல் நசீர் தலைமையில் நடைபெற்றது. மாநகரச் செயலாளர் எம்.கோஸ்கனி வரவேற்றார். இதில், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், என்.குரு சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா ளர் ஜெயினுலாபுதீன், கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் டேவிட் சாலமன் மக்கா பள்ளித் தலைவர் சிராஜ்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ‘‘இஸ்லாமிய கிறிஸ்தவ சிறுபான்மை யினர் மீது ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளின் தாக்குதலை கண்டித்து தஞ்சையில் மார்ச்.5 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது’’ என முடிவெடுக்கப்பட்டது.
திருநறையூர் ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு
கும்பகோணம், பிப்.25- கும்பகோணம் அருகே உள்ள நறையூர் என்கின்ற திரு நறையூர் கிராமத்தில் அமைந்துள்ள பர்வத வர்த்தினி சமேத ராமநாதசாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக பிப்ரவரி 22 அன்று யாகசாலை பூஜைகள் தொடங்கின. பின்னர், கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை கள் செய்யப்பட்ட பின்னர், சிவாச்சாரியார்கள் புனித நீர் நிரப்பிய குடங்களில் இருந்த புனித நீரை ஊற்ற, குட முழுக்கு நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர். விழாவில் கோவில் உதவி ஆணையர் ராணி, தக்கார் அருணா, செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் திருநறையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமா மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழை வழக்காடு மொழியாக அறிவித்திடுக! வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை
தஞ்சாவூர், பிப்.25- அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின், தஞ்சை மாவட்டக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் வெ.ஜீவகுமார், மாவட்டச் செயலாளர் எம்.கே.சேகர், மாவட்ட பொருளாளர் ஏ.அருணாதேவி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘‘தமிழக அரசு தஞ்சாவூரில் அரசு சட்டக் கல்லூரியை உடனே துவங்க வேண்டும். ஒன்றிய அரசு, சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும். சென்னையில் உச்சநீதி மன்றக் கிளையை அமைத்திட வேண்டும்’’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்னார்குடியில் இன்று இலவச மருத்துவ முகாம்
மன்னார்குடி, பிப்.25- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இஸ்லாமிய தோழமைகள் அமைப்பின் சார்பில் மருத்துவமனை கட்டிடத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிறன்று (பிப்.26) காலை 9 மணி முதல் பிற்பகல் வரை நடைபெற வுள்ளது. முகாமில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், குழந்தையின்மை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளவுள்ளனர். இதில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, ஆதிச்சபுரம் அரசு மருத்துவமனைகளிலிருந்து புற்று நோயியல், மகப்பேறு மருத்துவம், பொதுநல மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவதுறைகளின் நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர். எனவே, மன்னார்குடி வட்டார பொதுமக்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறன் மாணவர்க்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
பாபநாசம், பிப்.25- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், பாபநாசம் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடை பெற்றது. முகாமில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா பங்கேற்று மாற்றுத் திறனாளி மாணவர்க ளுக்கான அடையாள அட்டையை வழங்கினார். முகா மில் டாக்டர்கள் எலும்பு முறிவு அப்துல் கவி, கண் கலைச் செல்வி, காது, மூக்கு, தொண்டை சரவணன், மன நலம் சித்ரா தேவி, குழந்தைகள் நலம் திவ்யா ஆகியோர் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை ஆட்சியர் ஆலோசனை
தஞ்சாவூர், பிப்.25- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ‘‘தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி வணிக நிறுவனங்களில் கடைகளில் பெயர் பலகைகளில் தமிழில் பெரிய அளவிலும், அதற்கு அடுத்து ஆங்கிலத்தி லும், மூன்றாவதாக பிற மொழிகளிலும் 5:3:2 என்ற விகி தத்திலும், பெயர்ப் பலகை அமைக்க வேண்டும். வணிகர் கள் அரசினுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு நர் சபீர் பானு, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தனபாலன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, மன்னர் சரபோஜி கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரி யர் அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மார்ச் 1 முதல் 3-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி
கரூர், பிப்.25- கரூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் 2023 மார்ச் 1 முதல் மார்ச் 21-ம் தேதி வரை 3வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களி லும் பசு மற்றும் எருமைகளுக்கு போடப்படவுள்ளது. எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 3 மாதத்திற்கு மேற்பட்ட தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாமல் போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் என கூறி கிளினிக் வைத்திருந்த அரசு ஓய்வு பெற்ற மருந்தாளுர் கைது
தஞ்சாவூர், பிப்.25- தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி சாலை கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவர் டிப்ளோமா இன் பார்மசி படித்து விட்டு, தஞ்சாவூர், நகராட்சியாக இருந்த போது மருந்தாளுநராக பணியாற்றி, கடந்த 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். இவர், மாதாக்கோட்டை சாலையில், பார்மசி படித்து இருந்த நிலையிலும், தனக்கு இருந்த அனுபவத்தின் அடிப்ப டையில், கிளினிக் ஒன்றை வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பு படிக்காமல், சுப்பிர மணியன் ஆங்கில முறை சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவத்துறை அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் திலகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், காவல்துறையினர், மருத்து வத்துறை அதிகாரிகள் சுப்பிரமணியனை விசாரித்தனர். இதில், சுப்பரமணியன் அனுபவத்தின் அடிப்படையில், கிளினிக் நடத்தி, ஆங்கில முறை வைத்தியம் பார்த்ததும், ஊசி செலுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுப்பிர மணியனை காவல் துறையினர் கைது செய்தனர்.
தார் உற்பத்தி ஆலை புகையால் 10 பேர் மயக்கம்
திருச்சிராப்பள்ளி, பிப்.25- திருச்சி வண்ணாங்கோவில் அருகே தனியார் தார் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தார் உற்பத்தி ஆலையில் அவ்வவப்போது மிகவும் கடுமை யான புகை மூட்டத்துடன் சுவாசிக்க முடியாத கரும்புகை வெளி வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக் கடி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதுடன் குழந்தைகளுக் கும் பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட புகை மூட்டத்தினால், வண்ணாங்கோயில், திருநகர் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கடு மையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில், 3 பேருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மற்றவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அப் பகுதியில் உள்ள அர சியல் தலைவர்களை சந்தித்து பலமுறை கோரிக்கை மனு அளித்த போதிலும் இந்த தார் ஆலையை வேறு இடத் திற்கு மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை என்று அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படு கிறது.
தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்படும் 7 பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்
திருச்சிராப்பள்ளி, பிப்.25- திருச்சி மாவட்டத்தில் கேட்பாரற்று, அனாதையாக வீசப்பட்ட பச்சிளம் குழந்தைகளை மாவட்ட குழந்தை கள் நலக் குழுவினர் மீட்டு சாக்சீடு என்ற தொண்டு நிறு வனத்தில் ஒப்படைத்து வருகின்றனர். இந்த தொண்டு நிறுவனம், திருச்சி திரு வானைக்காவல் மாம்பழச்சாலையில் செயல்பட்டு வரு கிறது. இங்கு, பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் சிசுக்கள் முதல், நான்கு வயது குழந்தைகள் வரை, என மொத்தம், 34 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பால் குடித்த போது, ஒவ்வாமை ஏற்பட்டதில் 5 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என மொத்தம், 7 குழந்தைகளுக்கு வயிற்று போக்கு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தைகள் அனைவரும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்ட பவ தாரணி என்ற, நான்கு மாத பச்சிளம் குழந்தை, கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு ஒவ்வாமை காரணமாக, திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.