அறந்தாங்கி, பிப்.15- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும். ஊராட்சிக்கு ஒரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்குரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவுடையார் கோவில் கண்மாய் நீர் பாசன சங்க தலைவர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் துணைத் தலைவர் சி.சுப்பிரமணியன், கண்ணமங்களம் நமச்சிவாயம், ஆவுடையார்கோவில் சிபிஎம் தாலுகா செயலாளர் எம். எஸ். கலந்தர், கோவிந்தராசு, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் தென்றல் கருப்பையா, நெருப்பு முருகேஷ், வே.வீரையா மற்றும் ஆ.கோவில் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.