districts

img

நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவை தோற்கடிப்போம் மாதர் சங்க மாநிலக் குழு தீர்மானம்

தஞ்சாவூர், பிப்.19-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், தஞ்சையில் மாநில பயிற்சி  வகுப்பு மற்றும் மாநிலக் குழு கூட்டம் பிப்ர வரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.  இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி சிறப்புரையாற்றினார். அகில இந்திய  துணைச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச்  செயலாளர் கே.ராதிகா, மாநிலப் பொருளா ளர் பிரமிளா, மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, மாநிலக் குழு உறுப்பி னர்கள் ஆர்.கலைச்செல்வி,  பி.கலைச்செல்வி,  மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, மாவட்டப் பொருளாளர் என்.வசந்தா மற்றும் மாவட்ட  நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி, கூலியை ரூ.650 ஆக அதிகரித்து வழங்க வேண்டும். சமுதாயத்தில் பெண் களுக்கு சமநீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை விடுபடாமல் கிடைக்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். வரும் 2024  நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவை  தோற்கடிக்க முற்போக்கு அணிகளுடன் இணைந்து தீவிரமாக செயல்படுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.