அரியலூர், டிச.20 - எல்.ஐ.சி முகவர்களுக்கு பணி பாதுகாப்பு விதியை உருவாக்க வேண்டும் என்று லிகாய் (அகில இந்திய எல்ஐசி முகவர்கள்) சங்க விளக்கக் கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. இச்சங்கத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி, புதன்கிழமை அரிய லூர் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு அச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கி கொண்டாடப் பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத் தின் கிளைத் தலைவர் என்.நீலமேகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் எம்.பாலசுப்ரமணியன் சங்க கொடியை ஏற்றி வைத்து, எல்.ஐ.சி ஊழியர் கள் மற்றும் பொதுமக்க ளுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், “கார்ப்பரேட் நலனை முன்னிறுத்தும் காப்பீடு சட்ட மசோதாவை நிறைவேற்றக் கூடாது. எல்.ஐ.சி. பங்குகளை துணை நிறுவனங்கள் மூலம் வழங்க வேண்டும். பீமா சுகம் எக்ஸ்சேஞ்சை அறிமுகப் படுத்தக் கூடாது. எல்.ஐ.சி மற்றும் பொதுத் துறை நிறு வனங்களை பாதுகாக்க வேண்டும். எல்.ஐ.சி முக வர்களுக்கு பணி பாது காப்பு விதியை உருவாக்கிட வேண்டும். எல்.ஐ.சி. பிரிமியத் துக்கு தனியாக வருமான வரி சலுகை வழங்க வேண்டும். எல்ஐசி முகவர்களுக்கான நல நிதி மற்றும் உண்மை யான ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பாலிசி பிரிமியம் மற்றும் வட்டி மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. லிகாய் பொருளா ளர் எல்.செல்வராஜ் நன்றி கூறினார்.