districts

img

புதிதாக போட்ட சாலையில் விரிசல்

பாபநாசம், ஜூன் 23 - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் முக்கியமான  சாலைகளுள் ஒன்று. இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை கடந்த கும்பகோணம் மகாமகத்திற்கு முன்னர் போடப்பட்டது.  அதன்பின்பி பேட்ச் ஒர்க் மட்டுமே நடந்தது. தற்போது சாலையோரம் மழை நீர் வடிகாலுடன் சாலை போடப்படு கிறது. பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத் துறையில்  சமீபத்தில் போட்ட சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற் பட்டுள்ளது. குண்டும், குழியுமாக இருந்த கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தற்போதுதான் போடப்படு கிறது. இதுவும் தரமில்லாமல் போடப்படுகிறதா என பாப நாசம் பகுதி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி, சாலையை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.