districts

img

பெட்ரோல் பங்கை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.17- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே எடையூர் அம்மளூர் எஸ்பிஆர் ஏஜென்சீஸ் ஐஓசி பெட்ரோல் பங்க் நடத்தி வந்த பி.வைகுண்டத்திடம், நெடும்பலம் முருகானந்தம் என்பவர் பெட்ரோல் பங்க்-ஐ விலை பேசி ரூ.1 கோடியே 35  லட்சம் வழங்கியுள்ளார். ஆனால், வைகுண்டம் பெட்  ரோல் பங்கை ஒப்படைக்கா மல் 5 வருடங்களாக தாம தப்படுத்தி வருகிறார்.

பி.வைகுண்டம் மற்றும்  அவரது மகன் பரணிதரனிட மிருந்து பெட்ரோல் பங்கை  மீட்டு, பெட்ரோல் பங்கில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். பாதிக்கப்பட்ட முருகா னந்தத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடி வரு கின்றனர். இதில் காவல்  துறை தலையிட்டு உடனடி யாக பேச்சுவாரத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.  கட்சியின் மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகி யோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சி.ஜோதிபாசு, கே. தமிழ்மணி, மாவட்டக் குழு  உறுப்பினர்கள்  டி.சுப்பிர மணியன், எஸ்.சாமிநாதன்,  ஆறு.பிரகாஷ், திருத்துறைப்  பூண்டி ஒன்றியச் செயலாளர்  டி.வி.காரல் மார்க்ஸ், நகர  செயலாளர் கோபு, முத்துப்  பேட்டை ஒன்றியச் செயலா ளர் கே.பழனிச்சாமி, நகரச் செயலாளர் சி.செல்லத்துரை மற்றும் நகர் மன்றத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் முத்துப்பேட்டை, திருத்  துறைப்பூண்டி ஒன்றிய, நக ரக் குழுவினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்