திருவாரூர், ஜுலை11- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம்,வேடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் வி.கலியபெருமாள் புதன்கிழமையன்று காலமானார். அன்னாரது மறைவுச்செய்தி அறிந்து கட்சியன் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி,மாநிலக்குழு உறுப்பினர் ஜி.நீலமேகம் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மூத்த தோழர் எஸ்.வி.கருப்பையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி,வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.இராதா,மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிர மணியன் மற்றும் கட்சியினர்,விவசாய சங்கத்தினர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தி னர்.