districts

img

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நாகை, புதுகையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், பிப்.27-  நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் கடை தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகை கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி. வெங்கட்ராமன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பி.நாகை மாலி கண்டன உரையாற்றினார்.  வேதாரண்யம் வடக்கு ஒன்றியம் சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் கோவை.சுப்பிரமணி யன், வேதை வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ. வெற்றியழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர். சிக்கல் கடை தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு ஒன்றியச் செய லாளர் வி.வி.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திர போஸ் கண்டன உரையாற்றினார். 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி, தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காமராஜன் உள்ளிட்டோர் பேசினர். கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் உள்ளிட்டோர் பேசினர். ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலா ளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், நகரச் செயலா ளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் பேசினர். ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் நெருப்பு முரு கேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், மாவட்டக்குழு உறுப்பி னர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் டி. சலோமி உள்ளிட்டோர் பேசினர். திருமயத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், ஒன்றிய அமைப்பாளர் துரை.நாராயணன் உள்ளிட்டோர் பேசினர். அம்மாப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்திற்கு மணமேல்குடி ஒன்றியச் செயலா ளர் கரு.ராமநாதன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.