districts

img

பாதாள சாக்கடைக்காக தோண்டிய குழிகளை மூடுக: சாலையில் நாற்று நட்டு சிபிஎம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.9- திருச்சி மாநகராட்சி  61,  65ஆவது வார்டுகளில்  விமான நிலையம், காமராஜ நகர், முஸ்லிம் தெரு, அந்தோணியார் கோவில் தெரு, வசந்த நகர், வயர் லெஸ்ரோடு உட்பட 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.   இப்பகுதிகளில் பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடவில்லை. இதனால் தார்ச்சாலைகள் மண் சாலைகளாக மாறி தினந்தோறும் மக்கள் கீழே விழுந்து காயமடையும்  அவல நிலை உள்ளது.  பாதாளச் சாக்கடைக் காக தோண்டிய குழிகளை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சாலை யில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட் டத்திற்கு சித்ரா, குமார் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, பகுதிச் செயலாளர் விஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் பேசினர். பின்னர் அதிகாரி களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் மூன்று மாத காலத்திற்குள் சாலைகள் சீரமைத்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனை வரும் கலந்து சென்றனர்.