மயிலாடுதுறை, பிப்.2 - திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில், ஆதீன நிர்வாகம் மூலம் அரசு மற்றும் ஊராட்சி சொத்துகள் அபகரிக்கப் பட்டு, சட்டவிரோத முறைகளில் வருவாய் ஈட்டப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரைவில் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள தாக கட்சி தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைந்துள்ள இந்த கோவில், நாட்டின் பல பகுதி களிலிருந்தும், வெளிநாடுகளி லிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது. இருப்பினும், கோவில் நிர்வாகம் பக்தர்களை சுரண்டுவதோடு, அரசு மற்றும் ஊராட்சி சொத்துகளை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக வரு வாய் ஈட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, திருக்கடையூர் ஊராட்சியின் புல எண்கள் 265, 218, 229, 238, 351, 385/4, 389, 457, 494, 582/3, 583/5, 590/9, 590/11, 586/8, 603/1, 612/1 போன்ற இடங்களில் உள்ள அரசு மற்றும் ஊராட்சி சொத்துகள் ஆதீன நிர்வாகத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. கோவில் நிர்வாகத்தின் முறைகேடுகள் கோவில் நிர்வாகம், பூக்கடை, பிரசாதக் கடை போன்றவற்றை ஏலத்தில் விட்டு, பெரும் வருவாய் ஈட்டி வருகிறது. மேலும், ஊராட் சிக்கு சொந்தமான குளங்களையும் ஆக்கிரமித்து, அவற்றை கோவில் குளம் என்று பித்தலாட்டம் செய்து, அரசு நிதியை திருப்பி அனுப்பி வைத்துள்ளது. இதனால், அரசு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் தடைபட்டுள்ளன. குறிப்பாக, 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆணைக் குளம் ஊராட்சிக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. இருப்பி னும், இதை கோவில் குளம் என்று கூறி, படிக்கட்டுகள் மற்றும் பூங்கா அமைக்க 1 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதியை ஆதீன நிர்வாகம் திருப்பி அனுப்பி வைத்து, திட்டத்தை தடுத்துள்ளது. பக்தர்கள் மீது சுரண்டல் கோவில் நிர்வாகம், பக்தர்களிட மிருந்து அதிகளவு கட்டணங்களை வசூலித்து வருகிறது. ஒரு திரு மணத்திற்கான கட்டணம் 300 ரூபா யிலிருந்து 22,000 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. மேலும், பூஜை மற்றும் பிற சடங்குகளுக்கான கட்டணங் களும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதனால், பக்தர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோவில் வருமானத்தை டிஜிட்டல் முறையில் வசூலிக்காமல், பாரம் பரிய முறையில் வசூலிப்பதால், வரு வாய் கணக்கு வைப்பதில் முறை கேடுகள் நடைபெறுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. ஏழை மக்கள் பாதிப்பு திருக்கடையூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்கள், கோவில் நிர்வாகத்தின் முறைகேடுகளால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோவில் பெயரில் உள்ள நிலங் களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மின்சார வசதிகள் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், விவ சாயிகள் அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். கோவில் நிர்வா கம், தடையில்லா சான்றுகளை வழங்க மறுப்பதால், இந்த பிரச்ச னைகள் தொடர்கின்றன. விழுப்புரம்-நாகை சாலை திட்டம் விழுப்புரம் முதல் நாகை வரை யிலான நான்கு வழிச்சாலை திட்டத் திற்காக, திருக்கடையூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அகற்றப்பட்டன. இதற்கான இழப்பீடு தொகைகள் கோடிக்கணக்கில் ஆதீனத்தின் பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால், நிலங்கள் மற்றும் வீடு களை இழந்த மக்கள் தவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரங்கம் பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச் சந்திரன் கூறுகையில், “திருக்கடை யூர் கோவில் நிர்வாகம், அரசு மற்றும் ஊராட்சி சொத்துகளை ஆக்கி ரமித்து, சட்டவிரோதமாக வருவாய் ஈட்டி வருகிறது. இதனால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. கோவில் நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து, விரை வில் மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். கோவில் நிர்வாகம், பக்தர்களை சுரண்டு வதை நிறுத்தி, அரசின் சொத்து களை மீட்க தமிழ்நாடு அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மேலும் குற்றச்சாட்டுகள் திருக்கடையூர் கோவில் நிர்வாகம், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு சொத்துகளை ஆக்கிர மித்து, கடைகள் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. மேலும், வேப்பஞ்சேரி சாலையில் உள்ள திருமண மண்டபத்தை சட்டவிரோத மாக விற்று, அதில் பல அடுக்கு மாடி சொகுசு விடுதி கட்டப்பட்டு வரு கிறது. இந்த இடம் அரசுக்குச் சொந்தமான நத்தம் நிலவரி திட்டத்தின்கீழ் வறுமையில் உள்ள வர்களுக்கு வழங்கப்பட வேண்டி யது. ஆனால், இது சட்டவிரோத மாக ஆதீனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. திருக்கடையூர் கோவில் நிர்வா கத்தின் முறைகேடுகள் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இருப்பினும், இதுகுறித்து அரசு துறைகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோவில் நிர்வாகத்தின் செயல்பாடு கள் குறித்து உரிய ஆய்வு மேற் கொண்டு, தமிழ்நாடு அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. (ந.நி)