districts

img

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்திடுக

நாகப்பட்டினம், பிப்.13- நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சி சிபிஐஎம் நாகை நகர குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு  வழங்கப்பட்டது. நாகை மருந்து கொத்தள ரோட்டில் செயல்பட்டு வந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையைத்தின் புதிய கட்டிட கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திடவும், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போகிடவும், முறையாகக் குடிநீர் வழங்கிடவும், ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து உடனடியாக சாலைகளை செப்பணிடவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவினை நகராட்சி ஆணையரிடம் நகரக் குழு சார்பில்  வழங்கப்பட்டது.  இதுகுறித்து சிபிஐஎம் நாகை நகரச் செயலாளர் க. வெங்கடேசன் கூறுகையில், மேற்கண்ட கோரிக்கைகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்,  இந்த நிகழ்வில் சிபிஎம் நகரக்குழு உறுப்பினர் வி.சுந்தர், 14 ஆவது வார்டு கிளைச் செயலாளர் எஸ். விஜயகுமார், கா. காந்திநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.