districts

img

இது வழக்கமான தேர்தல் அல்ல; ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் யுத்தம்

புதுக்கோட்டை, ஏப்.4 - இந்தத் தேர்தல் வழக்கமாக நடைபெறும் ஆட்சி மாற்றத்து;f கான தேர்தல் அல்ல. இந்திய ஜன நாயகத்தைப் பாதுகாக்கும் யுத்தம் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார். திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை.வை கோவை ஆதரித்து புதனன்று புதுக் கோட்டை, ஆதனக்கோட்டையில் பிரச்சாரம் நடைபெற்றது. ஆதனக் கோட்டை பிரச்சாரத்தில் சிபிஎம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பங்கேற்றார்.  புதுக்கோட்டையில் பிரச்சாரம்  செய்த மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது: கடந்த பாஜக ஆட்சியில் தேசிய கல்விக் கொள்கை என்ற  பெயரில் மாணவர்கள் பாதிக்கப் பட்டார்கள். இளைஞர்களுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் மட்டுமல்ல; இருந்த வேலையும் பறிக்கப்பட்டது. பெண்கள் மீதான  வன்கொடுமைகள், மாற்றுத்திற னாளிகளின் உரிமைகள் பறிப்பு,  விவசாயக் கடன்களைத் தள்ளு படி செய்யாமல் கார்ப்பரேட் களுக்கு சலுகைகளை வழங்கி யது என பல்வேறு சுமைகளை நாட்டு மக்கள் மீது மோடி அரசு இறக்கியது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு  வேலை, விவசாய விளைபொருட் களுக்கு இரண்டு மடங்கு விலை,  கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொ ருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15  லட்சம் போடுவேன் என்றது உள்ளிட்ட கடந்த 10 ஆண்டுகளில்  மக்களுக்கு அளித்த வாக்குறுதி கள் எதையும் நிறைவேற்றாத மோடி, வெறும் வாயால் வடை சுடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. மோடி ஆட்சி மக்களை எந்த  அளவுக்கும் காவு வாங்கத் தயங் காது என்பதை தேர்தல் பத்திர  ஊழல் உணர்த்துகிறது. உத்தர கண்டில் 44 தொழிலாளர்களைப் பழிவாங்கிய சுரங்கத்தை கட்டிய நிறுவனத்திடமிருந்து ரூ.55 கோடிக் கும், 35 போலி மருந்துக் கம்பெனி களிடம் இருந்து ஆயிரம் கோடி  ரூபாய்க்கான தேர்தல் பத்திரத்தை யும் பாஜக வாங்கியுள்ளது. தங்களது ஊழல் சாம்ராஜ் யத்தைப் பாதுகாப்பதற்காக பாஜக அரசின் கொடூரமான நடவ டிக்கைகளுக்கு முட்டுக் கொடுத் துவிட்டு கடைசி நேரத்தில் கூட்ட ணியை விட்டு விலகிய அதிமுக வையும் மக்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். தேசிய கல்விக்கொள்கை, தொழி லாளர்கள் தொகுப்புச் சட்டம், வேளாண் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் அனைத்தையும் ஆதரித்துவிட்டு, இப்போது கூட்ட ணியை விட்டு வெளியே வந்து அதிமுக நாடகமாடுகிறது. மாநி லங்களவையில் அதிமுகவும், பாமகவும் எதிர்த்து வாக்களித்து இருந்தால் குடியுரிமைச் சட்டமே நிறைவேற்றப்பட்டு இருக்காது. இது வழக்கமாக நடைபெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல. அரசியல் சாசனத்தை, அறிவியல் கண்ணோட்டத்தை, ஜனநாயகத்தை பாதுகாப்ப தற்காக நடத்தப்படுகின்ற யுத்தம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செய லர் சோலையப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே. கலியமூர்த்தி, காங்கிரஸ் கட்சி யின் சிறுபான்மையினர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் இப்ரா ஹிம் பாபு, நகர்மன்ற உறுப்பி னர் ஜே.ராஜா முகமது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செய லர் நாடிமுத்து, ஆம் ஆத்மி மாவட்டத் தலைவர் அப்துல் ஜப்பார்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.