districts

சென்னை பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக துணைவேந்தர் நியமனம் செய்யவேண்டும்

சென்னை, நவ.28- சென்னை பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக துணைவேந்தர் நிய மனம் செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  சென்னை பல்கலைக்கழகம் கடந்த 16 மாதங்களாக துணைவேந்தர் இன்றி இயங்கி வருகிறது. புதிய துணை வேந்தர் நியமிக்கும் வரை, நான்கு பேர் கொண்ட கன்வீனர் கமிட்டி  சிண்டி கேட் சிறப்பு கூட்டத்தில் அமைக்கப்  பட்டது. இக்குழுவின் தலைவராக உயர் கல்வித்துறை செயலாளர், உறுப்பினர்களாக, தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் ஆணையர், ஐஐடி பேராசிரியர் மற்றும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஆகி யோர் நியமனம் செய்யப்பட்டனர். பல்கலைக்கழக பேராசிரியரை குழுவின் தலைவராக நியமிக்காமல், பல்வேறு பணிகளில் அன்றாடம் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை செயலாளரை குழுவின் தலைவ ராக நியமித்தது பல்வேறு சிக்கல்க ளுக்கு அடிப்படையாக அமைந்து விட்டது. மேலும், சென்னை பல்கலைக் கழகம் சார்பாக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஓய்வு பெற்று விட்டதால் தற்போது மூன்று பேர் குழுவாக இயங்கி வரு கிறது. புதிய துணைவேந்தர் நிய மிக்கப்படாததன் காரணமாகவும், கன்வீனர் கமிட்டியின் செயல்பாடு இன்மை காரணமாகவும் சென்னை பல்கலைக்கழகம் பல்வேறு நெருக்க டிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பல்கலைக்கழகத்தின் அன்றாட பணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. உதாரணத்தி ற்கு, அதிகபட்சம் 15 நாட்களில்  ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆய்வு மாணவர்க ளின் அனைத்து கோப்புகளும், கடி தங்களும் மாதக்கணக்கில் ஒப்பு தளிக்காமல் உள்ளது . 350க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் சமர்பித்த ஆய்வுக் கட்டுரைகள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு தேர்வர்களுக்கு ஆய்வு செய்வதற்கு அனுப்பப் படாமலும், ஒப்புதல் மற்றும் பரிந்துரை  தரப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பொது வாய்மொழித் தேர்வுக்கு அனுமதிக்கப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழல் காரணமாக பல ஆண்டுகளாக படித்து ஆய்வு செய்த மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி யுள்ளனர். இவ்வாறு ஆய்வு மாண வர்களின் கோப்புகள் மாதக் கணக்கில் பரிசீலனைக்கு உட்படுத்தப் படாதது குறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் எவ்வித அக்கறையும் செலுத்த வில்லை என தெரிய வருகிறது. எனவே உடனடியாக பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு செய்வதற்கான குழுவை (Search committee) அமைப்பதற்கு தமிழ்நாடு அரசும் , ஆளுநரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் எவ்வித இடை யூறுகளுக்கும் உள்ளாகாத வகையில் பல்கலைக்கழக செயல்பாடுகள் அமைவதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.