அரியலூர், டிச.29 - ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில், பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கொண்டாயிருப்பு காலனி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி சங்கீதா (24). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். இரண்டா வது பிரசவத்திற்கு சங்கீதா, ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரசவத்திற்காக கடந்த டிச.26 அன்று ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் சங்கீதா அனுமதிக்கப்பட்டார். டிச. 27 அன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது சங்கீதாவிற்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததாக கூறப் படுகிறது. மேலும் குடும்ப கட்டுப்பாடு செய்து கர்ப்பப் பையையும் அகற்றி யுள்ளனர். ரத்தப்போக்கு நிற்காத நிலை யில், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி உள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரி ழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா வின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் சங்கீதா உயிரிழந்த தாக குற்றம் சாட்டி ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். மேலும் சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். ரமணா திரைப்பட பாணியில் மருத்துவம் பார்த்த மருத்துவரை கைது செய்ய வேண்டும். உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங் கொண்டம் ராஜா தலைமையிலான உதவி ஆய்வாளர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து, சங்கீதாவின் உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற் கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. நீதி கேட்டு சிபிஎம் முற்றுகை ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், பெண் இறந்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முற்றுகைப் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணின் உயிரிழப்பிற்கு காரண மான அரசு மருத்துவரை கைது செய்ய வேண்டும். இறந்து போன சங்கீதா வின் கணவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். சரியான முறையில் உடற் கூறாய்வு செய்து உண்மைத் தன்மையை அறியும் வகையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினர். சிபிஎம் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் தலை மையில், அரியலூர் மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.அம்பிகா, கடலூர் மாவட்டக் குழு உறுப்பினர் தினேஷ் பாபு, திருமுட்டத்தை சேர்ந்தோர் மற்றும் ஈச்சம்பூண்டி உள்ளிட்ட கிராம மக்கள், உறவினர்கள் பங்கேற்றனர்.