districts

தலித் சிறுமிகள் கும்பல் பாலியல் வன்கொடுமை: குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுத்திடுக!

திருப்பூர், மே 18 - உடுமலை தலித் சிறுமிகள் மீதான  பாலியல் வன்முறை வழக்கில் உரிய  மேல் நடவடிக்கை எடுக்கவும், இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கவும் தேவையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் த.கிறிஸ்து ராஜை சந்தித்து அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: உடுமலையில் இரண்டு தலித் சிறுமி களிடம் மீது 9 பேர் பாலியல் கூட்டு வன் புணர்வில் ஈடுபட்ட குற்றத்திற்கு காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் உடனடி தலையீடு காரணமாக வேகமாக குற்றவாளிகள் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டன. மேலும் மார்க்சி ஸ்ட் கட்சி தலையீடு காரணமாக  பாதிக்கப் பட்டவர்கள் தலித் சிறுமிகளாக உள்ள தால் எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழும் கூடு தலாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அந்த சட்டப்பிரிவின்படி பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்க வேண்டிய நிவா ரணத் தொகையை விரைந்து வழங்க  வேண்டும். இதில் மேலும் குற்றவாளி கள் இருப்பின் கைது செய்து உரிய வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  திருப்பூர் மாவட்டத்தில் இது போன்று வழக்குகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்பு தாராபுரத்தில் ஒரு தலித் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி  மருத்து வமனைக்கு மருத்துவ சிகிச்சைக்கு  சென்ற பின்னணியில் குற்றவாளி  குறித்த தகவல்கள் வெளியாகின.  தற்போது உடுமலையில் இரண்டு சிறுமி கள் பாதிக்கப்பட்ட சம்பவம் வெளிவந்தி ருக்கும் சமயம், காங்கயத்தில் இதே  போன்று ஒரு சம்பவம் நடைபெற்ற  தகவல் வெளியாகியுள்ளது.  அனைத்தும் மருத்துவமனையில் இருந்து தகவல் சொல்லப்பட்டு பின் குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில்  உள்ளூர் காவல் நிலையங்களில் உடனடியாக நடவ டிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்ற னர். இதன் மீது காவல்துறை உடனுக்கு டன் உரிய நடவடிக்கை மேற்கொள் வதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இந்த சம்பவங்களில் ஈடு படும் குற்றவாளிகள் அனைவரும் கஞ்சா உட்பட போதை பொருட்களை பயன்படுத்தியுள்ளது, பத்திரிகைச் செய்திகள் மூலம் அறியப்படுகிறது. உடுமலையில் தலித் சிறுமிகளுக்கு உரிய உளவியல் ரீதியாக மனநல சிகிச்சை அளிப்பதை உடனடியாக மேற் கொள்ள வேண்டும். மேற்படி உடு மலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவர்களின் படிப்பு மற்றும்  பாதுகாப்பிற்கு சிறப்பு ஏற்பாடுகளை யும், அதற்கான நிதியை அரசிடம் பெற்று வழங்குவதையும் உறுதி செய்ய  வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை களின் எதிர்காலம் கருதி உரிய வயது  நிரம்பியவுடன் அரசு வேலை வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும்.   உதவி மைய எண்கள் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச் செல்லாதவாறு காவல் துறை மற்றும் அரசு தரப்பு உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும். பாதிக்கப்படும் குழந்தைகள் உரிய தகவல்களை சொல்வதற்கு உதவி மைய எண்களை கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்துவதை உறுதி செய்ய  வேண்டும். போக்சோ சட்ட பிரிவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சொல்லப்பட்டுள்ள அனைத்து  வழிகாட்டும் நெறிமுறைகளையும் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் மையங்களில் நிரந்தரமாக இருக்கும் வகையில் விளம்பரங்கள் செய்ய வேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சி வருவாய், உள்ளாட்சி, காவல் துறை நிர்வாகங்களை முழுமையாக இதற்கு பயன்படுத்த வேண்டும். வாய்ப்புள்ள தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை நீதிபதி, காவல் ஆணையர் உள்பட கல்வி நிறுவனங்களில் விழிப்பு ணர்வை ஏற்படுத்துவது குற்ற செயல் களை தடுக்க உதவிடும்.  போக்சோ சட்ட வழிகாட்டுதல்கள்  இதுவரை மாவட்ட அளவில் போக் சோ சட்ட வழிகாட்டுதல்கள் எந்த அள விற்கு அமலாக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் முழுமை யாக ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப் பட்ட பெண் குழந்தைகளை போக்சோ  சட்டத்தின் படி விசாரிக்கும் அதிகாரி கள் உரிய வழிகாட்டுதல் படி செயல்படு வதை உறுதி செய்ய வேண்டும். சீருடை  அல்லாத உடையில் சென்று குழந்தை களிடம் விசாரணை மேற்கொள்வது, காவல் நிலையங்களுக்கு அழைத்து செல் லாமல் குழந்தைகள் நல மையத்தில் வைத்து விசாரிப்பது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.  மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் கஞ்சா உட்பட போதை வஸ்துகள்  அவ்வப்போது காவல் துறையால் கைப் பற்றப்படுவதாக நாளிதழ்களில் வந்த வண்ணம் உள்ளது. முழுமையாக இத னை தடை செய்ய உரிய நடவடிக்கை களை காவல்துறை மேற்கொள்ள வேண் டும். இத்தகைய நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என  மனுவில் கூறப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங் களுக்கு ஆறுதல் கூறப்பட்டது.

;