அரியலூர், ஜூன் 20-
கட்டுமானத் தொழிலா ளர்களை மருத்துவக் காப் பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாத ஓய்வூதியம் ஆயி ரம் ரூபாய் என்பதை 2 ஆயி ரம் ரூபாய் என உயர்த்தி வாரி யம் முடிவு செய்ததை விரைந்து அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும். வயது நிறைவ டைந்த நாள் முதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும்.
கால தாமதம் ஆனால் நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். பெண் தொழி லாளர்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்குவதோடு, ஓய்வூதியம் பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் கிடைக்கச் செய்ய வேண்டும். இறுதி புதுப்பித்தல் தவறிய 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளிக்கும் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். விபத்து எங்கு நடந்து இறந்தாலும் ரூ.5 லட்சம் நிவாரணம் என்பதை உறு திப்படுத்திட வேண்டும். கல்வி உதவித்தொகை வழங்குவதையும், பணி யின்போது நிகழும் விபத்து களால் கை, கால் எலும்பு முறிவு ஏற்படும் தொழிலா ளர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்குவதுடன், கட்டுமான தொழிலாளர்களை தமிழக முதல்வர் மருத்துவக் காப் பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும்.
மேலும், இ.எஸ்.ஐ. திட்டத்தையும் அமலாக்கி செயல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் அரியலூர் மாவட்டச் செய லாளர் துரைசாமி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிஐடியு மாவட்டத் தலை வர்கள் கலந்து கொண்டனர். பின்பு, அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது.