திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் புதிய பன்னாட்டு விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு செவ்வாயன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர காவல் ஆணையர் காமினி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.