தோழர் ரெங்கநாயகி காலமானார் திருவாரூர், ஜன.13- திருவாரூர் பவித்திரமாணிக்கம் ஆசியா நகரில் வசித்து வந்த அம்மையார் எஸ்.ரெங்கநாயகி (78) உடல்நலக்குறைவால் வியாழனன்று (ஜனவரி 13) அதிகாலை காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் குரு.சந்திரசேகரனின் மூத்த சகோதரி ஆவார். இவரது மறைவு செய்தி அறிந்து சங்கத்தின் மாநில தலை வர் என்.எல்.சிறீதரன், பொதுச் செயலாளர் இளமாறன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் தொலை பேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தனர். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஆர்.கலியபெரு மாள், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம்.சவுந்தரராஜன், சிபிஎம் அலுவலகச் செயலா ளர் எஸ்.ராமசாமி, நகரச் செயலாளர் எம்.தர்மலிங்கம், அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் உ.சண்முகம், காவேரி கலைக்குழு பாடகர் பொன்.மகாலிங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்க மூத்த நிர்வாகி கலைச்செல்வம், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் வி.முனியன், ஆசியா நகர் நலச்சங்க தலைவர் ஆர்.சோமசுந்தரம் மற்றும் அனைத்துத் துறை சங்க நிர்வாகிகள், இயக்க நண்பர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு மறைந்த அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தி னார்.