தஞ்சாவூர், ஏப்.23 -
சாதாரண மக்களுக்காக குரல் கொடுத்த, எளிய தோழர், வில்லாபுரம் வீராங்கனை என்று மக்களால் அழைக் கப்பட்டு, சமூக விரோதிகளால் படு கொலை செய்யப்பட்ட தியாகி தோழர் கு.லீலாவதி நினைவு தினம் தஞ்சாவூர் கணபதி நகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. தோழரின் உருவப் படத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமையில், மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் என்.வி.கண்ணன், பி. செந்தில்குமார், எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.சர வணன், இ.வசந்தி, மாநகரச் செயலா ளர் எம்.வடிவேலன் மற்றும் மாதர் சங்க, கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் ஒன்றிய குழு சார்பில் ஞாயிறன்று தோழர் லீலாவதி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சி க்கு ஒன்றிய செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். மூத்த தோழர் கே.சி.பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகேசன், தெய்வ நீதி, வாலிபர் சங்க ஒன்றிய செயலா ளர் சங்கர், மாதர் சங்க ஒன்றிய செய லாளர் கே.மல்லிகா, விவசாய சங்க ஒன்றிய தலைவர் கணேசன், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றிய செயலா ளர் சித்ரா உள்ளிட்டோர், தோழர் லீலாவதி உருவப்படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.