போக்குவரத்து துறை தனியார் மயமாக்கலை கண்டித்தும், பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லாத வகையில் ஓட்டுநர், நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதைக் கண்டித்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் வேலூர் மண்டலம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தனர். இதில் துணை செயலாளர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.