திருச்சிராப்பள்ளி, மே 29 - திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சி யரகத்தில், தென்மேற்கு பருவமழை யையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவிக்கையில், “தென் மேற்கு பருவ மழைக் காலங்களில் தினமும், இரண்டு மணி நேரங்க ளுக்கு ஒருமுறை மழையளவு அளிக்க ஏதுவாக 24X7 பொறுப்பு அலு வலர்களை வட்டாட்சியர்கள் நியமிக்க வேண்டும். ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ள 154 பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். முதல்நிலை மீட்பு பணி யாளர்களுக்கு கோட்டம், வட்டம் அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மூலம் உரிய பயிற்சி அளித்து அறிக்கை அனுப்ப வேண்டும். பாதுகாப்பு மையங்கள் அடிப்படை வசதிகளுடன், நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குடிநீர், சுகாதாரமான உணவு, மின்சார வசதி, அவசர விளக்கு, ஜெனரேட்டர், மெழுகு வர்த்தி ஆகியன கிடைத்திட தேவை யான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் அபாயகரமான கட்டிடங்களை முன்கூட்டியே கண்ட றிந்து, அவற்றை முறையாக அகற்று வதற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
குடிநீர் விநியோகம் சீராக இருக்க வேண்டும்
வெள்ள காலத்தில் சீரான குடிநீர் விநியோகம், மின்சாரம், சாலை, பொது சுகாதாரம், கழிவுநீர் தேக்க மின்மை குறித்து கண்காணிக்கவும், குளோரினேஷன் செய்து குடிநீர் விநி யோகம் செய்யவும் வேண்டும். மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் குளோரினேஷன் செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். காவல்துறையினர் கோட்டாட்சி யர், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு அவசர கால நடவடிக்கைகளை தாமதமின்றி மேற் கொள்ள வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தீய ணைப்பு ஊர்திகளை தயார் நிலை யில் வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதி யில் உள்ள மக்களை படகு, பரிசல் மூலம் அப்புறப்படுத்தி பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏது வாக தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்துவதற்கு அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கோட்டம் மற்றும் வட்ட அளவில் மீட்பு பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சிகள் நடத்த வும், முதல் நிலை மீட்புப் பணியா ளர்களுக்கு பயிற்சி அளித்திடவும் வேண்டும்.
சுகாதாரத் துறை தயாராக இருக்க அறிவுறுத்தல்
சுகாதாரத் துறை அவசர காலப் பிரிவு வாகன வசதிகளுடன் கூடிய மருத்துவக் குழு அமைத்து 24 மணி நேரமும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். தொற்று நோய்கள் ஏற்ப டாமல், இருக்க தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, விதை, உரம் தேவையான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு துறை கால் நடைகளுக்குத் தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுத் தல், தேவையான மருந்துகளை கால் நடை மருத்துவமனையில் இருப்பில் வைத்திருத்தல், கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை இருப்பு வைத்திருத்தல் வேண்டும். பொதுப் பணித்துறை அனைத்து நீர்நிலைகளில் பருவ மழைக் காரணமாக வெள்ளம் ஏற்படக் கூடும் என்பதால், கரைகளை கண் காணித்தும், தேவையான அளவு மணல் மூட்டைகளை இருப்பில் வைத்திருக்கவும் வேண்டும். மதகு கள், தடுப்பணைகள், கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் உரிய பரா மரிப்பு பணிகள் தொடர்ந்து செய்திட வேண்டும்.
24 மணி நேரமும் மின் விநியோகம்
தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானத் துறை, தட்டுப் பாடின்றி 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்திடவும், பழுதடைந்த மின் கம்பங்களை உடனுக்குடன் சரி செய்யவும், நடவடிக்கை மேற்கொள் ளவும் வேண்டும். மேலும் அவசர காலங்களில் 24 மணி நேரமும் பணி யாற்ற தொழில்நுட்ப பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத் துறை பொதுமக்களுக்கு உணவுப்பொருள், அரிசி, மண் ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை சாலை கள் மற்றும் பாலங்களில் பழுது ஏற்படின் (அரிப்பு மற்றும் உடைப்பு) உடனுக்குடன் கண்டறிந்து அதனை சரிசெய்தல் வேண்டும். சாலை களின் குறுக்கே மரம் விழுந்தால் அதனை உடனுக்குடன் அகற்றுதல் வேண்டும். திருச்சிராப்பள்ளி நகரில் உள்ள ரயில்வே பாலத்திற்கு கீழ் தேங்கக் கூடிய மழைநீரை பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்ப டாமல் உடனுக்குடன் அகற்றிட வேண்டும். வெள்ள பாதிப்பு சமயங்களில் பொது மக்களை பாதுகாப்பான இடத் திற்கு அழைத்து செல்வதற்கு தேவையான மாற்று வழிகளை கண்டறிய வேண்டும். போக்கு வரத்துத் துறை சார்பில் பேருந்து களை அவசர கால பயன்பாட்டிற் காக தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். தனியார் ஆம்புலன்ஸ் வாகன விபரங்களை மாவட்ட ஆட்சி யர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு அளிக்கவும் வேண்டும். இயற்கை, இடர்ப்பாடுகள் தொடர் பாக ஒவ்வொரு துறை அலுவலர் களும் தங்களுடைய துறை சார்பாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை நடத்தி கூட்ட நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிட வேண்டும். பருவ மழைக் காலத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து அலு வலகங்களிலும் 24 மணிநேரமும் பொறுப்பு அலுவலர்கள் பணியாற் றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், அனைத்துத் துறை அலுவலர்களும் தலைமையிடத்தை விட்டு அனுமதியிலோ, விடுப்பிலோ செல்லும்போது மாவட்ட ஆட்சிய ரின் முன் அனுமதி பெற்ற பின்புதான் செல்ல வேண்டும். விடுப்பு காலத்தில் பொறுப்பு அலுவலர்கள் விபரம் தெரி விக்கப்பட வேண்டும்” என்றார்.