கரூர்,ஜூன் 27- வேளாண் உற்பத்திக் கான அரசின் திட்டங்களை விவசாயிகளுக்கு முழுமை யாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று கரூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அலுவலர்க ளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தி னார். கரூர் மாவட்ட ஆட்சியர கத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ. தங்கவேல் தலைமையில் ஜூன் 27 அன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகை யில், தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொரு ளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. வேளாண் உற்பத்தி க்கு முக்கியத்துவம் அளி த்து அரசு அறிவித்து செயல் படுத்தி வருகின்ற அனை த்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதுடன் விவசாயிக ளின் குறைகளை அனை த்துத் துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இதுபோன்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்க ளில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப் பட்டுள்ளன. அந்தவகை யில், யூரியா 1524 மெட்ரிக் டன்னும், டிஏபி 851 மெட் ரிக் டன்னும், பொட்டாஷ் 900 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 1802 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 5,077 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோடைக் காலங்களில் கால்நடைக ளின் தீவன மேலாண்மையை பூர்த்தி செய்யும் வகையில் மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தி, அசோ லா பசுந்தீவன உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ள லாம். மேலும், கறவை மாடு களுக்கான கோடைக்கால பராமரிப்பு மேலாண்மை, கோடைக்காலங்களில் கறவை மாடுகளுக்கான குடிநீர் மேலாண்மை, தீவன மேலாண்மைக்கான திட்டமிடல், ஆடுகளுக்கான கோடைக்கால பராமரிப்பு மேலாண்மை உள்ளிட்ட வைகள் குறித்து இக்கூட்டத் தில் விரிவாக எடுத்துரைக் கப்பட்டுள்ளது என்று தெரி வித்தார். விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 195 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக, விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் தோட்டக்கலைத் துறை யின் சார்பில் அமைக்கப் பட்டிருந்த கருத்துக்காட்சி யினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம. கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் ரவிச் சந்திரன் மற்றும் விவசாயி கள் கலந்துகொண்டனர்.