நாகப்பட்டினம், மே 24 -
இந்திய தொழிற்சங்க மையத்தின் ஏழுமுனை நடைபயண பிரச்சார இயக்கத் தின் ஒரு பகுதி நாகப்பட்டினம் மாவட் டத்தை வந்தடைந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர், நாகை புதிய பேருந்துநிலையம், சிக்கல் கடைத்தெரு, கீழ்வேளூர், வெண்மணி, சாட்டியகுடி ஆகிய பகுதியில் பிரச்சா ரம் நடைபெறுகிறது.
இதில் சிக்கல் கடைத் தெருவில் நடைபெற்ற பிரச்சார பயணத்தில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, பயணத் தின் நோக்கம் குறித்து பேசினார். பின்னர் கீழ்வேளூர், தேவூர் வழியாக, தொழிலாளர் வர்க்கத்தின் விளைநில மான வீரவெண்மணியில் உள்ள தியாகி நினைவிடத்தில் உள்ள ஸ்தூபிக்கு நடைபயண பிரச்சாரக் குழுவினர் செவ் வணக்கம் செலுத்தினர்.
இதில் பிரச்சார பயணக் குழு தலை வர் கே.திருச்செல்வன், கன்வீனர் சி.ஜெயபால், சிஐடியு மாவட்ட செயலா ளர்கள், கே.தங்கமணி, பி.மாரியப்பன், டி.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இப்பிரச்சார பயணத்தில் புதுவை சப்தர் ஹஷ்மி கலைக்குழு புரட்சிகர பாடல்களை பாடி, மக்கள் விரோத பாஜக அரசின் அவலங்களை எடுத்துரைத்த னர்.