கும்பகோணம், அக்.19 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகர சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் கும்பகோ ணம் அம்மாபேட்டை புறவழிச்சாலை பகுதி யில் ஏபிஜே அப்துல் கலாம் ஆட்டோ சங்கத்தின் (சிஐடியு) புதிய கிளை துவங்கப்பட்டது. புதிய ஆட்டோ சங்கத் தலைவர் நடராஜ் தலைமையில், சிஐடியு மூத்த தலைவர் ஆர். மனோகரன் விழாவை துவக்கி வைத்தார். விழாவில் மாமன்ற உறுப்பினர் அ.செல்வம், சாலை போக்குவரத்து சம்மேளன மாநில பொருளாளர் பார்த்தசாரதி, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மாநகரத் தலைவர் சங்கர், செயலாளர் கார்த்திக், புதிய ஆட்டோ சங்க செயலாளர் வினோத்குமார், பொருளாளர் கண்ணன் உட்பட ஆட்டோ தொழிலாளர்கள், சிஐடியு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.