districts

img

பாரத மிகுமின் சிஐடியு சங்க ஆண்டு பொது மகாசபை கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 28 - பாரத மிகுமின் சிஐடியு சங்க ஆண்டு பொது மகாசபை ஞாயிறன்று பெல் கம்யூனிட்டி ஹாலில் தோழர். பொன்மாலா நினைவரங்கத்தில் நடந்தது.  சங்க தலைவர் ஸ்ரீதர் தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர்கள் அருணன், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் காளிராஜ் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை துணைத் தலைவர் சேவியர்ராஜ் வாசித்தார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் பரமசிவம் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் இசக்கிமுத்து சமர்ப்பித்தார். சங்க விதிகள் திருத்தம் குறித்து துணைத்தலைவர் செல்வராஜ் பேசினார். சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன் வாழ்த்துரை வழங்கினார். ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்க கூடாது. பி.எச். இ.எல் நிறுவனத்திற்கு மூலப் பொருட்கள் வாங்க உலகளாவிய டெண்டருக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும்.  பி.எச்.இ.எல். நிறுவனத்திற்கு நடைமுறையில் இருந்த மானியங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். பி.எச்.இ.எல் நிர்வாகம் புதிய தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். வெல்டிங் துணைக் குழு உள்ளிட்ட பல்வேறு நிலுவையில் உள்ள தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஊரக மருத்துவமனையை நவீன மயமாக்க வேண்டும். ஊரகத்தை முறையாக பராமரித்து புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மதிப்புறு தலைவராக டி.கே.ரங்கராஜன், தலைவராக எஸ்.ஸ்ரீதர், பொதுச் செயலாளராக ஆர்.பரமசிவம், செயலாளராக கே.இசக்கிமுத்து, அமைப்பு செயலாளராக ஏ.வான்மணி, பொருளாளராக எம்.மோகன்ராஜ் மற்றும் 10 துணைத் தலைவர்கள், 14 உதவி செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் நிறைவுரை ஆற்றினார். முடிவில் அமைப்புச் செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.