பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் சிறுவாச்சூர் ஊராட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மக்களுடன் முதல்வர் முகாமை வியாழனன்று தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாம்ளா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.