திருத்துறைப்பூண்டி, ஜன.20- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகரம் பெரியநாயகிபுரம் 21 வது வார்டுலிருந்து பல்வேறு அமைப்புகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. நிகழ்விற்கு கிளை செயலாளர் சி.பாஸ்கர் தலைமை தாங்கினார். நகர குழு உறுப்பினர் ஏ.கே.செல்வம் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கலந்துகொண்டு கட்சி கொடி யை ஏற்றி வைத்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு செந்துண்டு அணிவித்து வரவேற்றார். இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மார்க்சி ஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில், கட்சியின் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், நகர குழு உறுப்பினர்கள் கே.கோபு, எம்.ஜெயபிரகாஷ், என்.கோதா வரி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் என்.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.