அறந்தாங்கி, ஆக.10-
கட்டுமாவடியில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி கடைத்தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை ஆலயத்தில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு, நடு மாடு, பெரிய மாடு, கரிச் சான் மாடு, நடுக்குதிரை என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகையும், சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடு களை கட்டுமாவடி, செம்பியன்மகா தேவிப்பட்டினம், கணேசபுரம் கிராம மக் கள் செய்திருந்தனர்.