திருப்பூர், மே 12 – சாதி, மத அடையாளங்கள் மக் களின் ஜனநாயக உணர்வை வளர்ப்பதற்கு மிகப்பெரும் சவா லாக இருக்கின்றன என்று திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் பணி யாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றி தெரிவிப்ப தற்காக, ஞாயிறன்று திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத் திற்கு இந்தியா கூட்டணியின் திருப் பூர் தொகுதி வேட்பாளர் கே.சுப்ப ராயன் எம்.பி., வருகை தந்தார். இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச் சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் உரை யாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தற்போதைய தேர் தல் நடைமுறை என்பது மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவ தற்கு, குறிப்பாக இடதுசாரிக ளுக்கு பெரும் சிரமம் ஏற்படுத்துவ தாக உள்ளது. தேர்தல் சீர்திருத் தம் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நாடாளு மன்றத் தேர்தலில் தற்போது வரக் கூடிய செய்திகள், தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய நாடு முழுவ தும் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவு, வெற்றியை நோக்கி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இடதுசாரிகள் கணிசமாக வெற்றி பெற்ற நிலை யில் பொதுத்துறை நிறுவனங்க ளைப் பாதுகாக்கவும், மக்கள் நலத் திட்டங்களை அமலாக்கவும் நிர்பந்தம் செலுத்த முடிந்தது. வரக் கூடிய காலத்தில் இடதுசாரிகள் முக்கிய பங்களிப்பு செய்யக்கூடிய நிலைமை உள்ளது, என்று கே. காமராஜ் கூறினார். இதையடுத்து தேர்தல் பணி யாற்றியவர்களுக்கு நன்றி தெரி வித்து வேட்பாளர் கே.சுப்பராயன் கூறியதாவது: ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இடதுசாரிக ளின் பணி தற்போது சவாலானதாக மாறியுள்ளது. இதைப்பற்றி விவா திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக விகிதாசார பிரதிநிதித்துவம் அடிப் படையிலான தேர்தல் முறையைக் கொண்டு வர வேண்டும். இதை கம்யூனிஸ்டுகளின் நிலையாக மட்டுமில்லாமல், மக்களின் கருத் தாக மாற்ற வேண்டும். சாதி, மத அடையாளங்கள் மக்களின் ஜனநா யக உணர்வு மட்டத்தை வளர்ப்ப தற்கு பெரும் சவாலாக உள்ளன. அதில் இருந்து மக்களை வென்றெ டுக்க வேண்டியுள்ளது. தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர் தலில் இத்தொகுதியில் அனைத்து தோழமை கட்சியினரும் சிறப்பாக வேலை செய்தனர். குறிப்பாக இந்த தேர்தலின் முக்கியத்து வத்தை உணர்ந்து தோழமைக் கட்சி களின் அனைத்து தரப்பினரையும் சிறப்பாக செயல்பட வைப்பதற்கு தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள், ஊழியர்கள் முக்கிய பங்கு வகித் தனர். தேர்தல் பணியாற்றிய அனை வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று கே.சுப்பரா யன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் எம்.கே.எம். ஆர். பாலசுப்பிரமணியம், சிபிஐ மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின ரும் திரளானோர் பங்கேற்றனர். நிகழ்வின் முடிவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் நன்றி கூறினார்.