districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ஒன்றிய அரசு உயர்த்தி வழங்க வேண்டும்

கும்பகோணம், டிச.3- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக் கான சங்கத்தின் (டிசம்பர் 3) அமைப்பு தினத்தை முன்னிட்டு, சங்கம் சார்பில் தஞ்சா வூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு  ஒன்றியம் நாச்சியார்கோவில் கடைவீதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடை பெற்றது. ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நிலையான, நீடித்த வளர்ச்சிக்கான திட்டங் களை உருவாக்க வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய நிதியம் உரு வாக்க வேண்டும். கல்வி-வேலையில் தடை யற்ற சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி ஒதுக் கீட்டை ஒன்றிய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத்தினர். திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய தலை வர் பி.அனிதா தலைமை வகித்தார். ஒன்றியச்  செயலாளர் பார்த்திபன் போராட்டத்தை விளக்கி பேசினார். ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் பலர் பங்கேற்றனர்.