districts

img

ஏவிசி கல்லூரியில் வணிக மேலாண்மை கருத்தரங்கு

மயிலாடுதுறை அக்.12 - மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி வணிக மேலாண்மை துறை சார்பில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வணிக மேலாண்மை துறை தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் புல முதன்மையர் டாக்டர் எஸ்.மயில்வாகனன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டு முறைகள் குறித்து விளக்கினார். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஆர்.கார்த்திக், விஜி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். இதன்மூலம் மாணவ-மாணவிகள் பயனடைந்தனர்.