districts

img

தஞ்சையில் காலை உணவுத் திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது: ஆட்சியர்

தஞ்சாவூர், ஆக.17 -  தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த  15.7.2024 அன்று அரசு உதவிபெறும்  பள்ளிகளில் பயிலும் மாணவ, மாண வியர்களுக்காக விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டப் பணிகள் குறித்து தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவிக்கையில், “தஞ்சா வூர் மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும்  ஊராட்சிப் பகுதிகளில் 1,087 பள்ளி களில், 50,865 துவக்கப் பள்ளி மாணவ- மாணவியர்களும், நகர்ப்புற பகுதி களில் 62 பள்ளிகளில் 5,158 துவக்கப் பள்ளி மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 1,149 பள்ளிகளில் 56,023 துவக்கப் பள்ளி மாணவ-மாணவி யர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வரு கின்றனர். தற்போது 15.7.2024 அன்று தொடங்கி  வைக்கப்பட்ட விரிவுபடுத்தப்பட்ட முத லமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,870 மாணவ,  மாணவியர்கள் காலை உணவுத்  திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர்” என்றார். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து தமிழ்நாடு மக ளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும்  சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதலமைச்சரின் காலை  உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.