தஞ்சாவூர், ஜன. 3- தலையில் குண்டு பாய்ந்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி திங்களன்று மாலை உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலை அருகே கொத்தமங்கலத்துப் பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் - பழ னியம்மாள் தம்பதியின் மகன் புகழேந்தி (11). இவர் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்து வீட்டில் தங்கியி ருந்தார். அப்போது அருகில் உள்ள பசு மலைப்பட்டியில், காவல் துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கடந்த வியாழனன்று மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சக்திவாய்ந்த துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட இரண்டு தோட்டாக்கள் சிறுவன் புகழேந்தி தங்கி யிருந்த குடிசைக்குள் பாய்ந்தது. இதில் ஒரு தோட்டா சிறுவனின் தலைக்குள் பாய்ந்தது.
இதையடுத்து படுகாயமடைந்த சிறுவன் புகழேந்தி கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு, பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுவனின் தலையில் இருந்த தோட்டா அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சிறுவன் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ள நிலையில், ஞாயி றன்று மாலை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை ஆகியோர் சென்று, சிறுவனின் உடல்நிலை குறித்து பெற் றோர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்ட றிந்தனர். சிறுவனின் பெற்றோர்களிடம் அமைச்சர் தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை நிவாரண உதவி யாக வழங்கினார். பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் மற்றும் மூத்த மருத்துவர்களிடம் உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறு கையில், “சிறுவன் புகழேந்திக்கு முதல மைச்சரின் உத்தரவின்படி தனியார் மருத்துவமனைக்கு நிகரான உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பசு மலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் தற்போது தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், முதல மைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டு நிரந்தரமாக மூடுவதற்கு நடவ டிக்கை எடுக்கப்படும்.
ஒமைக்ரான் தொற்று பரவல் தற் போது அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சி யாக தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்ப டுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் விளையாட்டுத் துறை பயிற்சி பாதிக்கப்படாது” என்றார். அப்போது தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா கந்தபுனேனி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினரும், திமுக மத்திய மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரன், ஒரத்தநாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மதியழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.