தஞ்சாவூர், நவ.11 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழக மொழி பெயர்ப்புத்துறை துறைத் தலைவரும், இணைப்பேராசிரியரும், மக்கள் தொடர்பு அலுவலருமான, முனைவர் இரா.சு.முருகன் எழுதியுள்ள, ‘ரிசர்ச் அன்ட் பப்ளிகேஷன் எத்திக்ஸ்’ என்ற நூலை, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் வெளியிட, முதல் நூலை ஸ்ரீலங்காவின் இளைஞர் நாடாளுமன்றத்தின் துணை அமைச்சர், வெளியுறவு மற்றும் ராஜதந்திர உறவுகள் அமைச்சர் அகமத் சாதிக் பெற்றுக் கொண்டார். பின்னர் துணைவேந்தர் பேசுகை யில், “காலத்தைக் காட்டும் கண்ணாடி யாக விளங்கும் மிகச்சிறந்த ஒரு நூலை வடிவமைப்பது என்பது சுலபமான செயல் அல்ல. மக்கள் வாசித்துப் புரிந்து கொள்ளும் விதமாக செய்தி களை விளக்கி உரிய இடங்களில் மேற்கோள் காட்டி அதற்கான விதி முறைகளைப் பின்பற்றி நூலை வடி வமைத்தால்தான் அந்நூல் மக்களி டையே போற்றப்படும். அதிலும் பல்லறிவு பெற்ற ஒரு கல்வியாளரால் வெளியிடப்படும் போது அதன் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. அந்த வகையில் முனைவர் இரா.சு.முருகன் எழுதிய இந்த நூல் ஆய்வாளர்களுக்கு ஒரு சான்றாதார மாக விளங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்த நூலை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெளியிடுவது மிகவும் பெருமைக்கும் போற்றுத லுக்குரியதாகும்” என்றார். அப்போது பல்கலைக்கழக பதிவா ளர் சி.தியாகராஜன், வளர்தமிழ்ப்புல முதன்மையர் இரா.குறிஞ்சிவேந்தன், கலைப்புல முதன்மையர் பெ.இளை யாபிள்ளை, இலக்கியத் துறைத்தலை வர் ஜெ.தேவி, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைப் பேரா சிரியர் ஞா.பழனிவேல், மொழி பெயர்ப்புத்துறை இணைப் பேராசிரி யர் ப.ராஜேஷ், அகராதியியல் துறை இணைப் பேராசிரியர் சி.வீரமணி, தஞ்சை சமூக சேவகர் இன்பேன்ட்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.