districts

img

போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 12 - தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் தருபவர்கள் அல்லது போதை பொருட்களுக்கு எதிராக விழிப்பு ணர்வு பிரச்சாரம் செய்யும் கல்லூரி மாண வர்கள் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக இருக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரியில் படிக்க  கூடிய மாணவர்களிடம் போதைக்கு எதிராக  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, “போதை யற்ற தமிழ்நாடு” என்ற முழக்கத்தை முன்  வைத்து இந்திய மாணவர் சங்கம் திருச்சி  மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஒரு லட்சம் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது என முடிவு செய்தது. அதன்படி, திருச்சி சட்டக்கல்லூரி கிளைத் தலைவர் கவின் ஆதித்யா தலைமை யில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக் கத்தை மாவட்டத் தலைவர் சூர்யா துவக்கி  வைத்தார். மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன், சட்டக் கல்லூரி கிளைச் செயலாளர்  அபிராமி உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.