தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, மக்களிடம் சிறுதானியங்களின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தின. பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன், என்சிசி அலுவலர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் மற்றும் என்சிசி மாணவர்கள் பங்கேற்றனர்.