அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு
அறந்தாங்கி, செப்.4 - புதுக்கோட்டை மாவட்ட கல்வித்துறை யும், சமூக நலத்துறையும் இணைந்து நடத்திய மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கண் காட்சியில் ‘உணவு’ எனும் பிரிவில் ஆவுடை யார்கோவில் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவி ஆர்.தீபிகா மாவட்ட அளவில் 2 ஆம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாண விக்கு மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கினார். வெற்றி பெற்ற மாண விக்கும், வழிகாட்டி ஆசி ரியர் ரெ.புவனேஸ்வரிக் கும் பள்ளித் தலைமை ஆசிரியர் தாமரைச் செல்வன், உதவித் தலைமை ஆசிரியர் ஸ்டா லின், அனைத்து ஆசிரி யப் பெருமக்கள், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி தமிழரசி உள்ளிட் டோர் வாழ்த்து தெரி வித்தனர்.
வேளாண் துணை இயக்குநர் ஆய்வு
தஞ்சாவூர், செப்.4 - தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வேளாண்மைத் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) எஸ்.மாலதி, பேராவூரணி வட்டாரத் தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இயந்திர நெல் நடவு வயல்கள் மற்றும் ஜிங்க் சல்பேட் இட்ட வயல் களை பார்வையிட்டார். பேராவூரணி முதன்மை விரிவாக்க மையத்தில் தேசிய உணவு பாது காப்புத் திட்டத்தின்கீழ், வறட்சியை தாங்கி வளரக் கூடிய சொர்ணாசப் நெல் ரகத்தினை இதர இடு பொருட்களுடன் விவசா யிகளுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து காலகம் கிராமத்திற்குட் பட்ட அஞ்சூரணிக்காடு பகுதியில் அட்மா திட்டத் தின்கீழ் நடத்தப்பட்ட உழவர் வயல்தின விழா வில் பங்கேற்று பசுந்தா ளுரங்களின் பயன்பாடு குறித்து விவசாயி களுக்கு தொழில்நுட்ப விளக்கம் அளித்தார். டிராக்டர் கொண்டு பசுந்தாளுரப் பயிரினை மடக்கி உழுது மண் ணுக்கு வளம் சேர்க்கும் தொழில்நுட்பம் செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்த உழவர் வயல்தின விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
பருத்தி ஏலம்
பாபநாசம், செப்.4 - தஞ்சாவூர் விற்ப னைக்குழு, பாப நாசத்தை அடுத்த கபிஸ்த லம் அருகே கீழக்கொட் டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்கா ணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். கும்பகோணம் மற்றும் இதைச் சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 497 விவசாயிகள் 57.050 மெட்ரிக் டன் பருத்தி எடுத்து வந்தனர். கும்ப கோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 வணிகர்கள் கலந்து கொண்டு, அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.8509, குறைந்தபட்சம் ரூ.7599, சராசரி ரூ.7900 என விலை நிர்ணயித்தனர். பருத்தி யின் மதிப்பு ரூ.45 லட்சம்.
மாநில பாடத்திட்டம் தரம் குறைவானது அல்ல!
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு மமக தலைவர் கண்டனம்
பாபநாசம், செப்.4- தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் தரம் குறைவானது என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதற்கு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில பாடத் திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது என்று தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ரவியின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது. உண்மையில் இவர் ஒன்றிய நுண்ணறிவு அமைப்பில் (ஐபி) பணியாற்றியவர்தானே தவிரக் கல்வியாளர் அல்ல. மாணவர்களிடம் உரையாடியதன் வாயிலாக அவர்களின் தனித்திறனை அறிந்து கொள்ள முடியுமா? மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, கணித மேதைகளாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் சிறந்து விளங்குவதோடு செயலாற்றியும் வருகின்றனர். இந்நிலையில், மாநில பாடத் திட்டம் தரம் குறைந்தது என்று எந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஆளுநர் சொல்கிறார் என்று தெரியவில்லை. எந்த பாடத் திட்டத்தோடு தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை இவர் ஒப்பீடு செய்து இந்த முடிவுக்கு வந்தார். பொறுப்புள்ள அதிகாரத்தில் இருக்கும் இவர், மூன்றாம் தர அரசியல்வாதி போல மேடைகளில் பேசுவது சிறந்த வழிமுறையாகாது. பாடத்திட்டம் இதை விடச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு, அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து எழுத்துப் பூர்வமாகத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி கருத்துக் கேட்டிருக்க வேண்டும். மாநில பாடத் திட்டம் தரமற்றது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும், “தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் தரமற்றது” என்ற வாதத்தை நிராகரித்தது. மாநில பாடத் திட்டத்தைத் தமிழக அரசு தொடர்ந்து சமச்சீர்க் கல்வி முறையில் செழுமைப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வித் துறையையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் சிறுமைப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக இந்தக் கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காவாலிப்பட்டியில் விரைவில் சாலை அமைக்க கோரிக்கை
தஞ்சாவூர், செப்.4- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே காவாலிப் பட்டியில் கிடப்பில் இருக்கும் தெற்குத் தெரு சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவோணம் ஒன்றியம், காவாலிப்பட்டியில் அரசு மேல் நிலைப் பள்ளி அருகே உள்ள தெற்குத் தெருவிற்கு, 2023-2024 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ. 9 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில், 0.200, மீட்டர் பேவர் பிளாக் சாலை அமைக்க அலுவ லர்களால் உத்தரவிடப்பட்டு கிடப்பில் உள்ளது. இந்த பேவர் பிளாக் சாலையை விரைந்து அமைத்து தர வேண்டுமென இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பருவமழை காலங்களில் இவ்வழியே பொது மக்கள், பள்ளி, மாணவ, மாணவிகள் நடந்து செல்ல மிக வும் சிரமப்படுகின்றனர். எனவே, மழைக்காலம் தொடங்கு வதற்கு முன், உடனடியாக இப்பகுதியில் சாலை அமைத்து தர வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவ லர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோகைமலையில் வாலிபர் சங்க புதிய கிளை துவக்கம்
கரூர், செப்.4 - கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், கீழவெளியூ ரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைத் தலைவர் மணி தலைமை வகித் தார். கிளைச் செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிவா சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ் பேசினார். பொரு ளாளர் சந்திரசேகர் நன்றி கூறினார். துணைத் தலைவர் ஏழுமலை, துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தோகைமலை ஒன்றியம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகள், பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்வ தற்கு அரசுப் பேருந்துகளை அதிகமாக இயக்க வேண்டும். கீழவெளியூர் அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கீழவெளியூரில் இடிந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்திட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். வேலை நியமன தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடக்கம்
அரியலூர், செப்.4- அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருங்களாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, கோட்டைக் காடு ஆகிய கிராமங்களில், சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியில் ரூ.28.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்தி கரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் செவ்வாய்க் கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. இதற்காக மேற்கண்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக் கான கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தார். பின்னர் மணக்குடையான் ஊராட்சியில், ஆலத்தியூர் ராம்கோ சிமென்ட் ஆலை சார்பில் 100 குடியிருப்புகளுக்கு ரூ.42 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தனிநபர் சுகாதார வளாகத் தினை சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தார்.
ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சேர்க்கை
பாபநாசம், செப். 4 - அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது. ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரி வித்திருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாத புரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டா மாண்டு பட்டயப் படிப்பு சேர்க்கை செப்.5, 6 ஆகிய இரு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பட்டயப் படிப்பு பயில விரும்பும் மாண வர்கள் உரிய ஆவணங்களுடன் நேரடியாக செப்.5, 6 ஆகிய தேதிகளில் கல்லூரி நிர்வாகத்தினை தொடர்பு கொள்ளலாம். சேர்க்கையின் போது முதலாமாண்டு எனில், அசல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், நேரடி இரண்டா மாண்டு எனில் அசல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், அசல் சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - கலர், ஆதார் அட்டை நகல், மாற்றுத் திறனாளி எனில் அதற்கான அடையாள அட்டை நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்திய ராணுவப் படையில் சேர விழிப்புணர்வு கருத்தரங்கு
அரியலூர், செப்.4 - அரியலூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், இந்திய ராணுவப் படை யில் சேர்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கருத்தரங்குக்கு, அக்கல்லூரியின் முதல்வர் (பொ)ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருச்சியி லுள்ள ராணுவ ஆள் சேர்ப்பு, துணை அலுவலர் மேஜர் நீல்குமார், அலுவலர்கள் நெய்ஃப் சுபேதார் பி.ஆர்.சௌத்ரி, நெய்ஃப் சுபேதார் ஏ.கெ.திரிபாதி ஆகியோர் பேசினர். அதனைத் தொடர்ந்து அக்னிவீர் திட்டம் குறித்த விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவ ரொட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட னர்.
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை, செப்.4 - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, உதவி நிர்வாகப் பொறியாளர்கள் பங்கேற்றனர்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம்: து.ராஜா பேட்டி
தஞ்சாவூர், செப்.4- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசியப் பொதுச் செயலர் து.ராஜா. தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கையில், “மக்கள் நலன் சார்ந்தது அல்லாமல், கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு சாதகமான பொருளாதாரத்தை பிரதமர் மோடி அரசு கடைப்பிடித்து வருகிறது. இதனால், வேலை யில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியபடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை. இதனால் விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். குறைந்தபட்ச ஆதார விலையை அறி விக்குமாறு விவசாயிகள் போராடி வரும் நிலையில், அதற்கும் மோடியிடமிருந்து பதில் இல்லை. மாறாக அத்தியாவசிய பண்டங்க ளின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதற்கு மோடி அரசு பின்பற்றும் மிக மோச மான பொருளாதாரக் கொள்கையே காரணம். எனவே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசைக் கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதில், தமிழ கத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி ஆர்ப்பாட் டம் நடத்தப்படவுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் தவறான கொள்கைக்கு எதிராக வருகிற சட்டப்பே ரவைத் தேர்தலில் அம்மாநில மக்கள் வாக்க ளிப்பர் என்ற நம்பிக்கை நிலவுகிறது. விவசா யிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர் களில் பெரும்பாலானவர்கள் ஹரியானா வைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக தோல்வியடையும் என அரசியல் நோக்கர் கள் கூறுகின்றனர். மகாராஷ்டிரா, ஜார்க்கண்டிலும் பாஜக வுக்கு எதிராகவே மக்கள் தீர்ப்பு அமையும். எனவே, மத்தியில் அமைந்துள்ள ஆட்சி நீடிக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். மாநிலங்களின் உரிமையை ஒன்றிய அரசு பறித்து வருகிறது. இதற்கு ஆளுநர் களைக் கருவியாகப் பயன்படுத்துகிறது. எனவே, ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். கொல்கத்தா பாலியல் வன்கொடுமை சம்ப வத்துக்கு எதிராக அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், பாஜக இந்தப் போராட்டத்தை அரசியலாக்கி கொச்சைப் படுத்தி விட்டது” என்றார்.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை கண்காணிக்க அறிவுறுத்தல்
மயிலாடுதுறை, செப்.4- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உரையாற்றுகையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் முற்றிலுமாக ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் கூட்டாக சேர்ந்து பெட்டி கடைகள், டாஸ்மாக் மதுபானக் கூடம் (பார்), மற்றும் காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்ட இடங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படும் இடம், எங்கிருந்து வாங்கப்படுகிறது, யாருக்கெல்லாம் விற்பனை, எந்தெந்த ஊருக்கு விற்கப்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், விற்கப்படுவது கண்டறியப்பட்டால் உடனே அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனையை ஆரம்ப நிலையிலேயே தடுத்து ஒழித்திடும் பொருட்டு, வட்டார அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான விற்பனை தொடர்பான விவரங்கள், அதன் மீதான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கையாக அளிக்க வேண்டும். வருவாய் வட்டாட்சியர்கள், தங்கள் வட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தி கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நடைபெறும் இடங்களை கண்டறிந்து தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள நகர, கிராம ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.1077 மற்றும் 7092255255 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்” என்றார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகர் சதுர்த்தி: பள்ளிகளில் உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, செப்.4 - சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட மாணவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டு மென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது: விநாயகர் சதுர்த்தி அன்று சுற்றுச்சூழ லுக்கு கேடு விளைவிக்காத களிமண், கிழங்குமாவு ஆகியவற்றால் தயாரிக்கப் பட்ட சிலைகளையே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ், பிளாஸ்டிக், தெர்மா கோல் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சிலைகளைப் பயன்படுத்தக் கூடாது. ரசாயன வண்ணங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட வாசகங்களை செப். 6 அன்று வரை பள்ளியில் நடைபெறும் காலை வணக்கக் கூட்டங்களின் போது உறுதிமொழி யாக ஏற்க வேண்டும். உறுதிமொழியேற்பு புகைப்படங்களை உரிய அறிக்கையுடன் தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பொறியாளருக்கும், தமிழகப் பசுமை இயக்கத்திற்கும் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.