districts

img

உயர்நீதிமன்ற விருந்தினர் இல்லத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு

தஞ்சாவூர், மே 15-

     தஞ்சாவூரில் உள்ள உயர் நீதிமன்ற விருந்தினர் இல்ல வளாகத்தில் கூடுதல் கட்டடத் திறப்பு விழா ஞாயி றன்று நடைபெற்றது.

    தஞ்சாவூர்-புதுக் கோட்டை சாலையில் யாகப்பா நகர் அருகே உயர்  நீதிமன்ற விருந்தினர் இல்லம் 2020 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த வளா கத்தில் கூடுதல் கட்டடம், கார் நிறுத்துமிடம், தரை அமைத்தல் பணிகள் போன்ற ரூ.79.86 லட்சம்  மதிப்பில் மேற்கொள்ளப் பட்டது.

    இக்கட்டடம், கார் நிறுத்து மிடத்தை சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி (பொ றுப்பு) டி.ராஜா திறந்து  வைத்தார். பின்னர், வளா கத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சுரேஷ்குமார், பி.டி.ஆதி கேசவலு, சி.சரவணன், மதுரை கிளை நீதிபதி ஆர். தாரணி, தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.