மயிலாடுதுறை, ஜூன் 3 - திமுக தலைவரும், தமிழக முன் னாள் முதல்வருமான மறைந்த கலைஞ ரின் 101 ஆவது பிறந்தநாள் விழா மயி லாடுதுறை மாவட்டம் செம்பனார்கோ வில், திருக்கடையூர், இலுப்பூர் சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் திங்களன்று கொண்டா டப்பட்டது. செம்பனார்கோவில் பேருந்து நிலை யம் அருகில் வடக்கு ஒன்றியச் செயலா ளர் பி.எம். அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளர் ஆர்.சுதா ஆகி யோர் பங்கேற்று கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு அரிசி, மரக் கன்றுகள், காய்கறிகள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல் திருக்கடையூர் ஊராட்சி யில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழாவிற்கு மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜயகுமார் தலைமை வகித்தார். எம்எல்ஏ நிவேதா எம். முருகன் கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார். சங்கரன்பந்தல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவிற்கு தெற்கு ஒன்றியச் செயலாளர் அப்துல் மாலிக் தலைமை வகித்தார். இதில் எம்எல்ஏ நிவேதா முருகன், கலைஞர் உருவப்படற் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொது மக்க ளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.