districts

img

திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு விடுதி அமைத்திடுக!

திருச்சிராப்பள்ளி, பிப்.14- திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்த கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சங்கத் தின் மாவட்டச் செயலாளர் மோகன் ஆட்சியரிடம் அளித் துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது : திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதி இல்லாமல் மாண வர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.  மாணவர்கள் வெளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கக் கூடிய நிலை உள்ளது. இதனை பயன் படுத்தி அப்பகுதியில் உள்ள தனியார் வீட்டு உரிமையா ளர்கள் வீட்டு வாடகை என்ற பெயரில் கொள்ளைய டிக்கின்றனர். இதனால் மாணவர்கள் பகுதி நேர வேலை பார்த்து வாடகை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  அரசு சட்டக்கல்லூரிக்கு என கே.கே.நகர் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடம் தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  எனவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த வழக்கினை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதுவரை மாணவர்கள் தங்குவதற்கு அரசு சட்டக் கல்லூரிக்கு அருகில் பல ஆண்டுகளாக பயன்படுத் தப்படாமல் உள்ள இளை ஞர்கள் விடுதியை சீரமைத்து  கொடுக்க வேண்டும். அரசு சட்டக்கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் அமைத் துத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  மனு கொடுக்கும் நிகழ் வின்போது, அரசு சட்டக் கல்லூரி கிளை செயலாளர் கவின், ஆதித்யா,  மாவட்டத் தலைவர் சூரியா, மாவட்டக் குழு உறுப்பினர் செல்வ குமரன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.