புதுக்கோட்டை, செப்.19 - கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பிற்கு எதிரான “அணையா நெருப்பு” என்ற விழிப்புணர்வு குறும்படத் தின் குறுந்தகடு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை வெளி யிடப்பட்டது. குறுந்தகட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வெளியிட்டு படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, கோட்டாட்சியர் முருகே சன், நடிகர் மற்றும் தயாரிப்பாளரும், கறம்பக்குடி வட்டம் பொன்னன்விடுதி கிராம அலுவலராகவும் பணிபுரியும் கே.செல்லத் துரை, இயக்குநர் பேட்டை சக்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.