districts

img

நன்னிலம், திருவாரூரில் விரைவில் அறிவுசார் மையம்

திருவாரூர்,நவ.9- திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட ரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை செய லாக்க நூலக்குழு ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. சட்டப் பேரவை நூலகக்குழுத் தலைவர் எஸ்.சுதர்சனம் தலைமை வகித்தார், திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி. சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பி னர் பூண்டி.கே.கலைவாணன் திருத் துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆய்வுக்கூட்டத்தில் ,திருவாரூர் மாவட்டத்திலுள்ள நூலகங்களை பெரிதுப்படுத்தி, வாசகர் வட்டங்களை அதி கப்படுத்தி, நூலகங்கள் மக்களுக்கும், மாணவர்களுக்கும் அதிகளவில் பயன் படுவதற்கான நிலையினை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நன்னிலத்தில் 3500 சதுர அடி மற்றும் திருவாரூரில் 4500 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் அறிவுசார்மையம் விரைவில் அமைக்கப்பட்டு பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு வரும் என சட்டப் பேரவை நூலகக்குழு தலைவர் எஸ்.சுதர்சனம்  தெரிவித்தார்.